/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புகையிலை பொருள் விற்ற கடைக்கு 'சீல்'
/
புகையிலை பொருள் விற்ற கடைக்கு 'சீல்'
ADDED : ஜூலை 13, 2024 08:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாரண்டஹள்ளி:தர்மபுரி மாவட்டத்தில், அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி நேற்று முன்தினம், மாரண்டஹள்ளி, 4 ரோடு பகுதியில், பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், அங்குள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டார். அப்போது, ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது.
அதையடுத்து அக்கடைக்கு, 'சீல்' வைத்து, 25,000 ரூபாய் அபராதம் விதித்தார்.