sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 8,000 கன அடியாக சரிவு

/

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 8,000 கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 8,000 கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 8,000 கன அடியாக சரிவு


ADDED : ஆக 08, 2024 12:28 AM

Google News

ADDED : ஆக 08, 2024 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல்:ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 8,000 கன அடியாக சரிந்தது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால், கர்நாடகாவிலுள்ள அணைகள் நிரம்பி, நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை பாதுகாப்பு கருதி, காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 2,729 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 5,346 கன அடி என, மொத்தம், 8,075 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு வினாடிக்கு, 17,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 6:00 மணிக்கு, 8,000 கன அடியாக சரிந்தது.

ஒகேனக்கல் காவிரியாற்றில் தொடர் வெள்ளப்பெருக்கின் போது, சேதமான மெயின் பால்ஸ், நடைப்பாதை, பெண்கள் குளிக்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளை பென்னாகரம் பி.டி.ஓ., சுருளிராஜன், ஷகிலா, பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து நேற்று, 23 வது நாளாக காவிரியாற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை உள்ள நிலையில், நீர்வரத்து சரிந்ததால், பரிசல் இயக்கும் இடத்தையும், அதிகாரிகள் பார்வையிட்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us