sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.28 லட்சம் கன அடியாக உயர்வு

/

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.28 லட்சம் கன அடியாக உயர்வு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.28 லட்சம் கன அடியாக உயர்வு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.28 லட்சம் கன அடியாக உயர்வு


ADDED : ஜூலை 31, 2024 08:41 PM

Google News

ADDED : ஜூலை 31, 2024 08:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி:ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று மதியம், 3:00 மணிக்கு வினாடிக்கு, 1.28 லட்சம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடகாவிலுள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பி உள்ளது. தொடர் நீர்வரத்து அதிகரிப்பால் அணை பாதுகாப்பு கருதி, தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 70,750 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து வினாடிக்கு, 1,03,222 கன அடி என மொத்தம், 1,73,972 கன அடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு வினாடிக்கு 75,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மதியம், 3:00 மணிக்கு, 1.28 லட்சம் கன அடியாக அதிகரித்தது.

தொடர் நீர்வரத்தால், ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ், மெயின் பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகள் மற்றும் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்தும், சத்திரம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளை தொட்டவாறும் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது. நேற்று, 16 வது நாளாக காவிரியாற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் தடை தொடர்கிறது. ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் வாகனங்கள், பென்னாகரம் அடுத்த மடம் செக்போஸ்டில், போலீசார் தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.

ஒகேனக்கல், அதையொட்டிய காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில், வருவாய் துறை, போலீசார், ஊரக வளர்ச்சி, தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us