/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
திருவிழாவில் தகராறு 10 பேர் கைது
/
திருவிழாவில் தகராறு 10 பேர் கைது
ADDED : ஏப் 13, 2025 05:06 AM
ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரத்தில் உள்ள வன்னியர் கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து இரவு, 10:30 மணிக்கு மேல், ஜலகண்டாபுரம் பஸ் ஸ்டாண்டில், கட்டிநாயக்கன்பட்-டியை சேர்ந்த ஒரு கோஷ்டியும், அரசமரத்தடியை சேர்ந்த மற்-றொரு கோஷ்டியும், கத்தி, அரிவாள், கட்டை, கற்கள் ஆகிய-வற்றால் மாறி, மாறி தாக்கிக்கொண்டனர்.
இதனால் மக்கள், பக்-தர்கள் அலறி அடித்து ஓடினர். பாதுகாப்புக்கு இருந்த போலீசார், கலைந்து போகச்சொல்லியும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டனர். கூடுதல் போலீசாரை வரவழைத்து, இரு கோஷ்டி மோதலை கட்-டுப்படுத்தினர். இதுதொடர்பாக, ஜலகண்டாபுரம் போலீசார், 13 பேர் மீது வழக்குப்பதிந்தனர். அதில், 10 பேரை நேற்று கைது செய்து,
தலைமறைவான, 3 பேரை தேடுகின்றனர்.

