ADDED : ஏப் 08, 2026 06:35 AM
அ நிறம் | அளவு
பென்னாகரம், தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதன்படி, 'தேர்தல் திருவிழா' 'என் வாக்கு என் உரிமை' என்ற விழிப்புணர்வு பதாகைகளுடன் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று கொடியசைத்து தொடங்கி
வைத்தார்.
பேரணியில், 150-க்கும் மேற்ப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் துாய்மை காவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியானது பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் தொடங்கி சந்தை வழியாக மீண்டும் பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது.
தேர்தலில் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கிராமிய நாடக நிகழ்ச்சிகள் நடத்தப்
பட்டது.
