/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'ரூ.1,000 கோடி அமுக்கியது யார்'போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வழக்கு
/
'ரூ.1,000 கோடி அமுக்கியது யார்'போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வழக்கு
'ரூ.1,000 கோடி அமுக்கியது யார்'போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வழக்கு
'ரூ.1,000 கோடி அமுக்கியது யார்'போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வழக்கு
ADDED : ஏப் 03, 2025 01:58 AM
'ரூ.1,000 கோடி அமுக்கியது யார்'போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வழக்கு
பர்கூர்:பர்கூர் சுற்றுவட்டாரத்தில், '1,000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து, 1,000 கோடி ரூபாய் அமுக்கியது யார்' என கேட்டு, பா.ஜ.,வினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர். ஒட்டியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் குறித்து, பா.ஜ.,வினர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பா.ஜ.,வினர் போஸ்டர் ஒட்டியிருந்தனர். அதில், 'டாஸ்மாக் ஊழல் - 1,000 ரூபாய் கொடுப்பது போல் கொடுத்து, 1,000 கோடி ரூபாய் அமுக்கியது யார்' என்ற வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. இதுகுறித்து பர்கூர் வி.ஏ.ஓ., ரமேஷ், நேற்று முன்தினம் பர்கூர் போலீசில் புகாரளித்தார். அதன்படி போஸ்டர் ஒட்டியதாக, பர்கூர் அடுத்த வள்ளுவர்புரத்தை சேர்ந்த, பா.ஜ., மண்டல பொதுச்செயலாளர் மயில்வேலன், 45, பர்கூர் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த ஒன்றிய தலைவர் முருகன், 51, ஆகியோர் மீது, பர்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
அதேபோல, பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரி முன், மேம்பாலம் அருகே, போஸ்டர் ஒட்டியதாக பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளி வி.ஏ.ஓ., டேனியல் அளித்த புகார் படி, பா.ஜ., வட்டத் தலைவர் கங்கா முருகன், 48, என்பவர் மீது, கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

