sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

2 மாணவர்கள் மாயம்

/

2 மாணவர்கள் மாயம்

2 மாணவர்கள் மாயம்

2 மாணவர்கள் மாயம்


ADDED : அக் 10, 2025 01:26 AM

Google News

ADDED : அக் 10, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், அரூர் திரு.வி.க., நகரை சேர்ந்தவர் மும்தாஜ், 30. இவருக்கு, 2 மகள் மற்றும் ஆரிப், 13, என்ற மகன் உள்ளனர். மும்தாஜ் தன் கணவரை பிரிந்து, பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

ஆரிப், அரூர் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 7ல் இரவு, 7:30 மணிக்கு அதே பகுதியில் வசிக்கும் ஆரிப்பின் நண்பர் ராகேஷ், 14, என்பவர் சைக்கிளில் ஆரிப்பின் வீட்டிற்கு வந்துள்ளார். பின், மும்தாஜியிடம் தன்னுடன் ஆரிப்பை வீட்டிற்கு அனுப்பும்படி கேட்டுள்ளார். இதையடுத்து, ராகேஷ்சுடன் ஆரிப்பை, மும்தாஜ் அனுப்பி வைத்துள்ளார்.

அதன் பின், இரவு வெகு நேரமாகியும் ஆரிப் வீடு திரும்பவில்லை. பின், ராகேஷ் குடும்பத்தினரும் மொபைல்போனில் தொடர்பு கொண்டு மும்தாஜ் கேட்ட போது, ஆரிப், ராகேஷ் இருவரும் வீட்டிற்கு வரவில்லை எனக் கூறியுள்ளனர். இது குறித்து மும்தாஜ் அளித்த புகார் படி, அரூர் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான ஆரிப், ராகேஷ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us