ADDED : ஆக 06, 2026 01:33 AM

அ நிறம் | அளவு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அம்பேத்கர் நகர் புதுகாலனி ஏரிக்க-ரையில், நேற்று முன்தினம் பகல், 12:30 மணிக்கு அரூர் எஸ்.எஸ்.ஐ., தர்மன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அங்கு, சந்தேகப்படும்படி நின்றிருந்த இரண்டு வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில், அதேப் பகு-தியைச் சேர்ந்த மணிகண்டன், 20, தமிழழகன், 24, ஆகியோர் என்பதும், சட்டை பாக்கெட்டில் வைத்து, 100 கிராம் கஞ்சாவை விற்க முயன்றது தெரிந்தது. இதையடுத்து, அவர்கள் இருவ-ரையும் போலீசார் கைது செய்தனர்.
