/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வெவ்வேறு இடங்களில் பைக் திருடிய 2 பேர் கைது
/
வெவ்வேறு இடங்களில் பைக் திருடிய 2 பேர் கைது
ADDED : பிப் 08, 2026 08:27 AM

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த சீகல-அள்ளியை சேர்ந்தவர் சின்னசாமி, 40. இவர், கடந்த, 3ல் பகல், 12:00 மணிக்கு காரிமங்கலம் பஸ் ஸ்டாண்டில் ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கை நிறுத்தியுள்ளார். பின், காரிமங்கலம் வாரச்சந்தைக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு, மதியம், 2:30 மணிக்கு வந்தபோது பைக்கை காணவில்லை. புகார் படி, காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து பைக்கை திருடியதாக, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த பள்ளிஅள்ளியை சேர்ந்த அருணாசலம், 26, என்பவரை கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், தடங்கம் அடுத்த சவுளுப்-பட்டியை சேர்ந்தவர் ரகுநாதன், 26. இவர், தனியார் மொபைல்போன் டவரில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு இலக்கியம்பட்டியில் உள்ள தனியார் மொபைல் போன் டவர் அருகே, யமஹா பைக்கை நிறுத்திவிட்டு வேலை செய்து கொண்-டிருந்தார். அப்போது, பைக்கை திருட முயன்ற வாலிபரை ரகுநாதன் மற்றும் அக்கம், பக்கத்தினர் பிடித்து, தர்மபுரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரித்ததில், அவர், தர்மபுரி பெரியாண்டிச்சி கோவில் தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார், 24, என தெரிந்-தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

