ADDED : அக் 22, 2024 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடி தாக்கி 2 மாடுகள் பலி
அரூர், அக். 22-
அரூர் அடுத்த ஏ.கே.தண்டாவை சேர்ந்தவர் நாகேஷ், 45, விவசாயி; இவர், 5 மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று தனக்கு சொந்தமான மாடுகளை வயல்வெளியில் மேய்ச்சலுக்கு கட்டி வைத்திருந்தார். மாலை, 4:20 மணிக்கு இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது இடி தாக்கியதில், 2 மாடுகள் இறந்தன. வருவாய் துறையினர் சம்பவ இடம் சென்று, இடி தாக்கி இறந்த மாடுகளை பார்வையிட்டனர்.

