/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஏரியில் மண் கடத்திய 2 பேருக்கு 'காப்பு'
/
ஏரியில் மண் கடத்திய 2 பேருக்கு 'காப்பு'
ADDED : பிப் 11, 2025 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பைநல்லுார்: கம்பைநல்லுார் அடுத்த இருமத்துார் வி.ஏ.ஓ., சக்திவேல், 51. இவ-ருக்கு கிடைத்த தகவலின்படி, நேற்று காலை, 11:30 மணிக்கு, தர்-மபுரி - திருப்பத்துார் சாலையில், இருமத்துார் தனியார் பள்ளி அருகில், அந்த வழியாக வந்த, 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தார்.
அதில், அனுமதியின்றி வையம்பட்டி ஏரியிலிருந்து தலா, 3 யூனிட் மண் கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து, டிப்பர் லாரிகள் மற்றும் பாரூரை சேர்ந்த ஓட்டுனர்கள் சக்தி, 40, ராஜா, 48, ஆகியோரை
கம்பைநல்லுார் போலீசில் ஒப்படைத்தார். அவர்-களை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள
சாமாண்-டப்பட்டியை சேர்ந்த சுரேஷ், 35, என்பவரை தேடி வருகின்றனர்.

