sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

2 டன் அலுமினிய கம்பிகள் திருட்டுமின்வாரிய அலுவலர் 4 பேர் கைது

/

2 டன் அலுமினிய கம்பிகள் திருட்டுமின்வாரிய அலுவலர் 4 பேர் கைது

2 டன் அலுமினிய கம்பிகள் திருட்டுமின்வாரிய அலுவலர் 4 பேர் கைது

2 டன் அலுமினிய கம்பிகள் திருட்டுமின்வாரிய அலுவலர் 4 பேர் கைது


ADDED : பிப் 13, 2025 01:28 AM

Google News

ADDED : பிப் 13, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

2 டன் அலுமினிய கம்பிகள் திருட்டுமின்வாரிய அலுவலர் 4 பேர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி:--பாப்பிரெட்டிப்பட்டி அருகே, 2 டன் மின்கம்பிகளை திருடி விட்டு, திருட்டு போனதாக நாடகமாடிய, மின்வாரிய அலுவலர்கள், 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தத்திலுள்ள மின்வாரிய அலுவலக குடோனில், 2 டன் அலுமினிய மின்கம்பிகள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது.

இது குறித்து, அலுவலக இளநிலை பொறியாளர் குமரவேல், பொம்மிடி போலீசில் புகார் செய்தார். மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.

இது தொடர்பாக அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர் தலைமையில், தனி படை எஸ்.ஐ., பழனிசாமி, தலைமையிலான போலீசார், மின்வாரிய அலுவலகத்தில் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், கடத்துார் மின் கோட்ட அலுவலக பண்டக சாலையிலிருந்து எடுத்து வந்த, 2 டன் மின் கம்பிகள் அலுவலகத்திற்கு கொண்டு வராமல், பி.பள்ளிப்பட்டி தனியார் கிழங்கு மில்லில் பதுக்கி வைத்து விட்டு, திருட்டு போனதாக அலுவலர்கள் நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும், பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த இளநிலை பொறியாளர் குமரவேல், 41, துரிஞ்சிப்பட்டி தற்காலிக பணியாளர் சிலம்பரசன், 30, மின்பாதை

ஆய்வாளர் மரியா லுாயிஸ், 55, தாளநத்தம் வணிக ஆய்வாளர் வெங்கடாஜலபதி, 46, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 2 டன் மின் கம்பிகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us