sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ரூ.4.50 கோடி மதிப்பில்தடுப்பணை கட்ட பூஜை

/

ரூ.4.50 கோடி மதிப்பில்தடுப்பணை கட்ட பூஜை

ரூ.4.50 கோடி மதிப்பில்தடுப்பணை கட்ட பூஜை

ரூ.4.50 கோடி மதிப்பில்தடுப்பணை கட்ட பூஜை


ADDED : ஏப் 01, 2025 01:39 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரூ.4.50 கோடி மதிப்பில்தடுப்பணை கட்ட பூஜை

பஞ்சபள்ளி:பஞ்சபள்ளி அருகே, ஜெல் திம்மனுார் ஆற்றின் குறுக்கே, 4.50 கோடி ரூபாய் மதிப்பில், தடுப்பணை கட்டும் பணிக்கான, பூமி பூஜை நேற்று நடந்தது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, பஞ்சப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட பஞ்சப்பள்ளி சின்னாற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரை, ஜெல் திம்மனுார் ஆற்றின் குறுக்கே, தடுப்பணை கட்டி கால்வாய் வழியாக, அமானிமல்லாபுரம் ஏரி, பஞ்சப்பள்ளி ஏரி, சாமனுார் ஏரி உட்பட, 15 ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்ல வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, ஏரிகளுக்கு நீரை பிரித்து அனுப்பும் வகையில், நீர்வளத்துறை நிதியிலிருந்து, 4.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், தடுப்பணை கட்ட பூமி பூஜை, அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமையில் நேற்று நடந்தது. இதில், தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், நகர செயலாளர் ராஜா, முன்னாள் பஞ்., கவுன்சிலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலக்கோடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் பூமிபூஜை செய்து, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us