/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 493 மனுக்கள்
/
மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 493 மனுக்கள்
ADDED : நவ 12, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 493 மனுக்கள்
தர்மபுரி, நவ. 12-
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர் நாள் முகாம், மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது. பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 493 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். முகாமில், கிறிஸ்துவ நலவாரியத்தில் பதிவு செய்த, 37 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.