ADDED : ஆக 30, 2026 03:04 AM

தர்மபுரி: தர்மபுரி அருகே, செட்டிகரையில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரியில், 4வது பட்டம-ளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரி துணை முதல்வர் ரூபி-மீனா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுமதி ஆண்டறிக்கையை வாசித்தார்.
இதில், 2025ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற, 217 மாணவ, மாண-வியர் தங்களது இளங்கலை பொறியியல் பட்டங்களை பெற்றுக் கொண்டனர். இம்மாணவர்கள் ஒட்டு மொத்தமாக, 81 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர். மேலும், 2025- - 2026 கல்வி-யாண்டில் வேலைவாய்ப்பு நேர்காணல் மூலம், 183 மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றனர். விழாவில், பி.என்.ஒய்., முதுநிலை நிதி ஆலோசகர் விஜய் சந்திர-சேகர், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். இதில், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆய்வக உதவியாளர்கள், நிர்வாக பணியாளர்கள், பெற்றோர் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
