ADDED : அக் 13, 2024 08:33 AM
தர்மபுரி: தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., விஜயசங்கர் தர்ம-புரி சுற்றுவட்டாரத்தில் ரோந்து சென்றார். அப்போது, மது விற்ற பழைய தர்மபுரியை சேர்ந்த குமார், 38, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த, 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். அதேபோல், டவுன் எஸ்.ஐ.,
வெங்கடேஷ்குமார் செங்கோடிபு-ரத்தில் மதுவிற்ற போத்ராஜ், 65, என்பவரை கைது செய்தார். டவுன்
எஸ்.ஐ., பச்சமுத்து ஏ.கொல்லஹள்ளி பகுதியில் மது விற்ற கதிரவன், 41, என்பவரை கைது
செய்தார். கிருஷ்ணாபுரம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., புஸ்பாகரன் தாலி-காரன்கொட்டாய் பகுதியில் மது
விற்ற மாணிக்கம், 50, என்ப-வரை கைது செய்தார்.பென்னாகரம் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஜீவா-னந்தம்,
பென்னாகரம் அடுத்த, நாகமரை சாலையில் மது விற்ற மொட்டையன், 70, என்பவரை கைது செய்தார்.
பாப்பாரப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., மாரி சிட்லகாரம்பட்டியில் மதுவிற்ற மாரி, 51
என்பவரை கைது செய்தார்.