/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
உலக முதலீட்டாளர் மாநாடு ரூ.699.17 கோடி முதலீடு
/
உலக முதலீட்டாளர் மாநாடு ரூ.699.17 கோடி முதலீடு
ADDED : ஜன 20, 2024 09:42 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டு அறிக்கை; தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடந்தது. இதில் தர்மபுரி மாவட்டத்திற்கு, 47 தொழில் நிறுவனங்கள் மூலம், 699.17 கோடி ரூபாய் மதிப்பில் புதிய முதலீடுகள் கண்டறியப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக உணவுசார் தொழில்கள், டெக்ஸ்டைல், இ.வாகனம், வேளாண் சார் தொழில்கள், பார்மா, எலக்ட்ரிக்கல், இன்ஜினியரிங், கட்டடம் சார் பொருட்கள், பிளாஸ்டிக்ஸ், பிளாஸ்டிக்ஸ் மாற்று பொருட்கள் போன்ற பல்வேறு துறைகளை சார்ந்த தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இதன் மூலம் நேரடியாக, 2,567 பேர் தர்மபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெற உள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.