sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தெரு நாயிடம் கடி வாங்கிய பள்ளி மாணவன் பரிதாப பலி

/

தெரு நாயிடம் கடி வாங்கிய பள்ளி மாணவன் பரிதாப பலி

தெரு நாயிடம் கடி வாங்கிய பள்ளி மாணவன் பரிதாப பலி

தெரு நாயிடம் கடி வாங்கிய பள்ளி மாணவன் பரிதாப பலி


ADDED : பிப் 10, 2025 12:15 AM

Google News

ADDED : பிப் 10, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்; தெருநாய் கடித்ததில், பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த சிக்கேகவுண்டனுாரை சேர்ந்த மாதேஷ் மகன் நந்தீஷ், 9; நீலகிரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்தார். பெற்றோர் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்வதால், பாட்டி அரவணைப்பில் வளர்ந்தார்.

கடந்த 3ம் தேதி தெருவில் விளையாடிய போது, அவரை தெருநாய் காலில் கடித்துள்ளது. பாட்டியிடம் நந்தீஷ் கூறவில்லை.

நேற்று முன்தினம் உடல்நிலை மோசமானதால், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தான், தன்னை நாய் கடித்ததாக டாக்டரிடம் கூறியுள்ளார்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் நந்தீஷ் இறந்தார். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us