ADDED : மார் 19, 2026 06:59 AM

தொப்பூர்:தொப்பூர்
சோதனைச்சாவடியில், 'சிசிடிவி' கேமரா கண்கா-ணிப்புடன் தேர்தல்
பறக்கும் படையினர், துணை ராணுவத்தினர் உதவியுடன் கூடுதல்
கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஏப்., 23ல் ஒரே
கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, கடந்த, 15ம் தேதி முதல்,
தேர்தல் நடத்தை விதி-முறைகள் அமலுக்கு வந்தன.
தர்மபுரி
மாவட்டத்தில், தொப்பூர், திப்பம்பட்டி, அனுமந்-தீர்த்தம், நரிபள்ளி,
கோம்பூர், ராம்மூர்த்தி நகர், பெரும்பாலை, மடம், கும்பாரஹள்ளி,
காடுசெட்டிப்பட்டி, நாய்குந்தி என, 11 இடங்களிலுள்ள நிலையான
சோதனைச்சாவடிகளில் போலீசார், பறக்கும் படையினர் சோதனையில்
ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே மாவட்ட எல்லையான தொப்பூர் காவலர்
குடியி-ருப்பு அருகே, சோதனையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலை-மையில், 5க்கும்
மேற்பட்ட போலீசார், 3 துணை ராணுவ படை-யினர், பறக்கும் படை அலுவலர்கள்,
'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி, அனைத்து வாகனங்களையும் தீவிர
சோதனைக்கு பின்பே அனுமதித்து வருகின்றனர்.
இதை, மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன், துணை ராணுவ படையை சேர்ந்த உதவி கமிஷ்னர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கண்காணிக்கின்றனர்.
