/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குற்ற தடுப்பு நடவடிக்கை போலீசாருக்கு அறிவுரை
/
குற்ற தடுப்பு நடவடிக்கை போலீசாருக்கு அறிவுரை
ADDED : பிப் 16, 2025 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி எஸ்.பி., மகேஸ்வரன், நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு அரூர் ஸ்டேஷனில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்-போது, நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்த ஆவணங்களை பார்-வையிட்டார்.
தொடர்ந்து சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்-கைகள், சாராயம், கஞ்சா விற்பனையை தடுப்பது மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். பின், அங்கிருந்து, 7:30 மணிக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, எஸ்.பி., வரு-கையை முன்னிட்டு, அரூர் கச்சேரிமேட்டில் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.