/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூரில் அழுகிய மீன்கள் விற்பதாக குற்றச்சாட்டு
/
அரூரில் அழுகிய மீன்கள் விற்பதாக குற்றச்சாட்டு
ADDED : டிச 21, 2025 06:42 AM

அரூர்: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், கடந்-தாண்டு மற்றும் நடப்பாண்டு, பெய்த கனம-ழையால், தற்போது அணைகள், தடுப்பணைகள், ஏரி மற்றும் குளங்களில் பரவலாக மீன் வளர்க்கப்-பட்டு வருகிறது. அங்கிருந்து பிடித்து வரப்படும் மீன்கள், அரூரில், வர்ணதீர்த்தம், ஆத்தோர வீதி, திரு.வி.க., நகர், பாட்சாபேட்டை, மஜீத்தெரு, பழையபேட்டை உள்ளிட்ட இடங்களில் விற்-பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், அரூரில், பல நாட்கள் ஐஸ் பெட்-டியில் வைத்து அழுகிய மீன்கள் விற்பனை செய்-யப்படுவதாக புகார் தெரிவிக்கும் பொதுமக்கள் அதை தடுக்க, நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
அரூர் பகுதிகளில் அதிகளவில், பல நாட்கள் ஐஸ் பெட்டியில் வைத்து, அழுகிய மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்கிச்சென்று சாப்-பிடும் பொதுமக்கள், பல்வேறு உடல் உபாதைக்கு ஆளாகின்றனர். சிலர், மீன்களை பயன்படுத்த முடியாமல் குப்பையில் வீசுகின்றனர். அழுகிய மீன்கள் விற்பனை குறித்து, உணவு பாதுகாப்புத்-துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. எனவே, அழுகிய மீன்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

