/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பி.பள்ளிப்பட்டியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
பி.பள்ளிப்பட்டியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பி.பள்ளிப்பட்டியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பி.பள்ளிப்பட்டியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : ஜன 20, 2026 05:31 AM

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பி.பள்ளிப்பட்டியில் அரசு உதவி பெறும், கார்மேல் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. கடந்த, 2000 - 2001ம் ஆண்டு, 10ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்-திப்பு நிகழ்ச்சி, தலைமையாசிரியர் டேவிட் அம-லதாஸ் தலைமையில் நடந்தது. பங்கு தந்தை அருள்ஜோதி முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் வாணி வரவேற்றார்.
விழாவில், 25 ஆண்டுகளுக்கு முன், அப்பள்-ளியில் பயிற்றுவித்த தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் அடிகளார் அருள்சாமி அடிகளார், ஆசிரியர்கள் வனிதா அம்சா
உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட
ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள், மலர் கொத்து வழங்கியும் சால்வை அணிவித்தும், நினைவு பரிசு வழங்கியும் கவுரவித்தனர்.
தொடர்ந்து, 25 ஆண்டுகளுக்கு முன், தாங்கள் படித்த வகுப்பறையில் அமர்ந்து, ஆசிரியர்களை பாடம் நடத்தச் சொல்லி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் தங்களை அறி-முகப்படுத்திக் கொண்டனர். தொடர்ந்து இப்பள்-ளிக்கு, முன்னாள் மாணவர் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது. பின், அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆசிரியர் பாலச்சந்தர் நன்றி கூறினார்.

