/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொப்பூர் கணவாயில் மீண்டும் லாரி விபத்து
/
தொப்பூர் கணவாயில் மீண்டும் லாரி விபத்து
ADDED : ஜன 30, 2024 12:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொப்பூர்: கர்நாடகாவிலிருந்து, சேலத்திற்கு, துவரம் பருப்பு லோடு ஏற்றிய லாரியை, கர்நாடகாவை சேர்ந்த டிரைவர் எல்லப்பா, 38, நேற்று ஓட்டி வந்தார்.
காலை, 9:00 மணிக்கு லாரி, தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாயில், ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.
டிரைவர் எல்லப்பா, இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார். தொப்பூர் போலீசார், பாளையம் சுங்கச்சாவடி ரோந்து படையினர், டிரைவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.