/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போதை பொருள் எதிர்ப்பு பள்ளியில் உறுதிமொழி ஏற்பு
/
போதை பொருள் எதிர்ப்பு பள்ளியில் உறுதிமொழி ஏற்பு
ADDED : ஜூலை 09, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, :தர்மபுரி அடுத்த, மூக்கனஹள்ளி அரசு உயர்நிலை பள்ளியில், தலைமையாசிரியர் சின்னசித்தன் தலைமையில், போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆசிரியர் விக்ரமன் முன்னிலை வகித்தார்.
இதில், போதை பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய தீமை குறித்து, மாணவர்களுக்கு எடுத்து கூறியதுடன், போதை பொருள் எதிர்ப்பு உறுதி மொழியை மாணவ, மாணவியர் ஏற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் போதை எதிர்ப்பு மன்றத்துடன் இணைந்து, தேசிய பசுமைப்படை மற்றும் மகிழ் முற்றம் அமைப்பு ஒருங்கிணைத்திருந்தது.