ADDED : பிப் 27, 2026 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி; தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நட-வடிக்கை குழு சார்பில், பல்வேறு கோரிக்கை-களை வலியுறுத்தி, தர்மபுரி மின்வாரிய செயற்-பொறியாளர் அலுவலகம் முன், கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மின்வாரிய பொறியாளர் கூட்டமைப்பு செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
முத்தரப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளரையும், அலுவல-ரையும் பிரித்து பாரபட்சம் காட்டக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பினர். இதில், மின்வாரிய உதவி இயக்குனர், மின்வாரிய பொறியாளர்கள், உதவி மின்வாரிய பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

