/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பட்டுக்கூடு அங்காடியில் ரூ.18 லட்சத்துக்கு ஏலம்
/
பட்டுக்கூடு அங்காடியில் ரூ.18 லட்சத்துக்கு ஏலம்
ADDED : பிப் 18, 2024 10:56 AM
தர்மபுரி: தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று, 18 லட்சம் ரூபாய் அளவுக்கு பட்டுக்கூடு ஏலம் நடந்தது.
தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர். நேற்று விவசாயிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரத்தில், 20க்கும் குறைவான விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்றனர். பின் விவசாயிகள் வருகை அதிகரித்து, நேற்று முன்தினம், 30 பேரும் நேற்று, 63 பேரும் ஏலத்துக்கு வந்திருந்தனர்.
இவர்கள், 112 குவியல்களாக, 4,204 கிலோ வெண்பட்டுக்கூடுகளை கொண்டு வந்தனர். இது, 301 முதல், 500 ரூபாய் வரை சராசரியாக, 430 ரூபாய்க்கு ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, 18 லட்சம் ரூபாய். நேற்று ஒரு நாள் நடந்த இந்த ஏலத்தால் அரசுக்கு, 27,106 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.