ADDED : ஜன 06, 2025 02:44 AM
அரூர்: அரூரில், சென்னை கொங்கு நாடு அறக்கட்டளை சார்பில், சான்-றோர்களுக்கு விருது மற்றும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா நேற்று நடந்தது. தலைவர் அப்பாவு வர-வேற்றார். அம்மன் கிரானைட்ஸ் தலைவர் முத்து ராமசாமி முன்-னிலை வகித்தார். தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார்.
விழாவில், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணிக்கு அருட்-செல்வர் விருதும், வித்யா மந்திர் கல்வி நிறுவனங்கள் தலைவர் சந்திரசேகருக்கு தீரன் சின்னமலை விருதும், தொழில்துறை விருது அஸ்வின் முத்துவுக்கும், கொங்குவேள் விருது அசோக-னுக்கும், காலிங்கராயன் விருது இ.ஆர்.கே., கல்வி நிறுவனங்-களின் தாளாளர் செல்வராஜி, உதயகுமார், பிரகாசம் ஆகியோ-ருக்கு வழங்கப்பட்டது. அதேபோல், டாக்டர் சுப்பராயன் விருது செந்தில் பப்ளிக் ஸ்கூல் செயலாளர் தனசேகருக்கும், கே.பி.சுந்தராம்பாள் விருது சாமூண்-டீஸ்வரிக்கும், சி.சுப்ரமணியம் விருது பாண்டுரங்கன் மற்றும் சந்-திரசேகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இலக்கியத்துறை விருது எழுத்தாளர் தேவிபாரதிக்கு வழங்கப்பட்டது. விழாவில், முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன்,
அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

