/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இயற்கை வளம் காத்தல் பள்ளியில் விழிப்புணர்வு
/
இயற்கை வளம் காத்தல் பள்ளியில் விழிப்புணர்வு
ADDED : பிப் 10, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரிமங்கலம்: தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மற்றும் தேசிய பசுமை படை சார்பில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்த்தல், பல்லுயிர் பெருக்கம், மண் வளம் காத்தல், இயற்கை வளம் காத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தர்மபுரி மாவட்டம், பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், தலைமை ஆசிரியர் திருமால் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலு முன்னிலை வகித்தார். தொடர்ந்து ஆசிரியர்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது. இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

