ADDED : ஆக 29, 2026 02:36 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி,: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மூலம், எச்.ஐ.வி., எய்ட்ஸ், பால்வினை நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
இதில், எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை, கலெக்டர் சரவணன், தொடங்கி வைத்தார். நாட்டுப்புற கலைஞர்களின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து மாணவியரின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராஜேந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய தேவராஜ், தொழுநோய் துணை இயக்குனர் புவனேஷ்வரி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு ஆலோசகர்கள் பாலமுருகன், ராஜ்குமார், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
