sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஒ‍கேனக்கல்லில் குளிக்க, பரிசல் இயக்க 14வது நாளாக தடை

/

ஒ‍கேனக்கல்லில் குளிக்க, பரிசல் இயக்க 14வது நாளாக தடை

ஒ‍கேனக்கல்லில் குளிக்க, பரிசல் இயக்க 14வது நாளாக தடை

ஒ‍கேனக்கல்லில் குளிக்க, பரிசல் இயக்க 14வது நாளாக தடை


ADDED : ஜூலை 10, 2025 01:08 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல்,

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளதால், அணை பாதுகாப்பு கருதி வினாடிக்கு, 45,000 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு, 43,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலையும் அதே அளவிற்கு வந்து கொண்டிருந்தது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, மெயின் பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின்பால்ஸ்க்கு செல்லும் நடைப்பாதைக்கு பூட்டு போடப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, 14வது நாளாக காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க தர்மபுரி மாவட்டத்தின் தடை

நீடிக்கிறது.






      Dinamalar
      Follow us