/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொட்டபாவளியில் எருது விடும் விழா; 150 காளைகள் பங்கேற்பு
/
தொட்டபாவளியில் எருது விடும் விழா; 150 காளைகள் பங்கேற்பு
தொட்டபாவளியில் எருது விடும் விழா; 150 காளைகள் பங்கேற்பு
தொட்டபாவளியில் எருது விடும் விழா; 150 காளைகள் பங்கேற்பு
ADDED : பிப் 17, 2024 12:39 PM
பாலக்கோடு: பாலக்கோடு, அடுத்த, தொட்ட பாவளியில் மாரியம்மன் கோவில் திரு விழாவை முன்னிட்டு எருதுவிடும் விழா நேற்று நடந்தது.
தொட்டபாவளி, அமானி மல்லாபுரம், நல்லுார், பெலமாரனஹள்ளி, கடத்திக்கொள்மேடு உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த, 150 காளைகள் கலந்து கொண்டன. முன்னதாக கோ பூஜை செய்து புனித நீரை, காளைகளின் மேல் தெளித்து, ஊர் கவுண்டர் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது,
அதனை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட காளைகள், வாடிவாசல் வழியாக, ஒவ்வொன்றாக திறந்து விடப்பட்டன. சீறி பாய்ந்து வந்த காளைகளை, ஏராளமான இளைஞர்கள போட்டி போட்டு அடக்க முயன்றனர். இறுதியில், சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏராளமானோர் எருது விடும் விழாவை கண்டுகளித்தனர்.