sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற கொள்ளையன் கைது

/

வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற கொள்ளையன் கைது

வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற கொள்ளையன் கைது

வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற கொள்ளையன் கைது


ADDED : நவ 28, 2025 01:34 AM

Google News

ADDED : நவ 28, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், திப்பம்பட்டி அடுத்த வன்னியகுளத்தை சேர்ந்தவர் தனசேகரன், 40. இவர், சோழமண்டல பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். தனசேகரின் தாய் அமரா, தோட்டத்தில் நர்சரி கார்டன் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த, 24ல் காலை, 11:00 மணிக்கு அமரா, தர்மபுரிக்கு சென்று விட்டு, மதியம், 3:00 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டும், உள்ளே பீரோவை உடைக்க முயற்சி செய்ததும் தெரிந்தது. ஆனால் வீட்டில் பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை. தனசேகர் புகார் படி கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் காரிமங்கலம் தாலுகா தேவரெட்டியூரை சேர்ந்த விஜய், 29, என்பவரை கைது செய்தனர்.

அவர் மீது கடந்த, 2023ல் கோவையில் பிரபல நகைக்கடையில், 6 கிலோ தங்கம் மாயமான வழக்கு மற்றும் கடந்த சில மாதங்களுக்கு முன், தர்மபுரியில் ஒரு வீட்டில், 50 பவுன் திருடு போன வழக்கு ஆகிய, 2 வழக்குகளில் முதல் குற்றவாளியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us