sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கருணாநிதியின் 102வது பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாட அழைப்பு

/

கருணாநிதியின் 102வது பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாட அழைப்பு

கருணாநிதியின் 102வது பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாட அழைப்பு

கருணாநிதியின் 102வது பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாட அழைப்பு


ADDED : ஜூன் 02, 2025 03:37 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க. செயலாளர் பழனியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:-

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 102-வது பிறந்த நாளை நாளை, தர்மபுரி மேற்கு மாவட்டத்தில், தி.மு.க., சார்பில் மாவட்டம் முழுவதும் செம்மொழி நாள் விழாவாக கொண்டாட வேண்டும்.

ஆங்காங்கே கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பா-ளர்கள் கருணாநிதி உருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் துாவி மரியாதை செலுத்தியும், பொதுமக்களுக்கு இனிப்பு, அன்-னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாட வேண்டும்.

இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த முன்னாள், இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், மாநில, -மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்-றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கிளை கழக நிர்வா-கிகள், அணிகளின் தலைவர்கள், துணைத்தலைவர்கள், அமைப்-பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும்.

இதேபோன்று, தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் காலை, 9:30 மணிக்கு, அரூர் ரவுண்டானா அருகிலும், காலை 10:30 மணிக்கு காரிமங்கலத்திலுள்ள கட்சி அலுவலகத்திலும் கொண்டாடப்பட உள்ளது.

இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us