/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மறியலில் ஈடுபட்ட 77 பேர் மீது வழக்கு
/
மறியலில் ஈடுபட்ட 77 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 22, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏரியூர்: பென்னாகரம் தாலுகா, ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளப்பள்ளம், புதுக்காடு, சீலநாயக்கனுார், பாய்பள்ளம், மேட்டுகாரன்கொட்டாய் ஊர்நத்தம் உள்ளிட்ட, 15 கிராமங்களுக்கு மொபைல் டவர் அமைக்க வலியுறுத்தி, நேற்று முன்தினம் ஊர்நத்தம் பகுதியில், 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்துக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்டதாக, தொண்ணகுட்டஹள்ளி வி.ஏ.ஓ., செந்தில்குமார் புகார் படி, ஏரியூர் போலீசார், 77 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.