/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மரவள்ளிக்கிழங்கு விலை சரிவு: விவசாயிகள் கவலை
/
மரவள்ளிக்கிழங்கு விலை சரிவு: விவசாயிகள் கவலை
ADDED : பிப் 10, 2025 01:36 AM
அரூர்: தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டு, அரூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, மாம்பாடி, வேட்ரப்பட்டி, மொரப்பூர், செட்ரப்பட்டி, கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில், 30,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்திருந்தனர். கடந்த, 4 மாதங்களாக மரவள்ளிகிழங்கு அறுவடை நடந்து வரும் நிலையில், தற்போது, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மரவள்ளி கிழங்கு விலை தொடர்ந்து சரிந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: பொங்கலுக்கு முன், மரவள்ளிகிழங்கு டன் ஒன்று, 6,000 ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து இடைத்தரகர்கள் கொள்முதல் செய்தனர். அதன்பின், படிப்படியாக விலை குறைந்து, தற்போது, 5,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.