/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விலையில்லா லேப்டாப் வழங்கக்கோரி பட்டய பயிற்சி மாணவர்கள் மனு
/
விலையில்லா லேப்டாப் வழங்கக்கோரி பட்டய பயிற்சி மாணவர்கள் மனு
விலையில்லா லேப்டாப் வழங்கக்கோரி பட்டய பயிற்சி மாணவர்கள் மனு
விலையில்லா லேப்டாப் வழங்கக்கோரி பட்டய பயிற்சி மாணவர்கள் மனு
ADDED : பிப் 10, 2026 06:07 AM

தர்மபுரி: மொரப்பூரில் உள்ள, கூட்டுறவு மேலாண்மை பட்-டய பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவர்க-ளுக்கு, விலையில்லா லேப்டாப் வழங்கக்கோரி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்-தனர்.
இது குறித்து, மனுவில் தெரிவித்துள்ளதாவது: தர்ம புரி மாவட்டம், மொரப்பூரில் உள்ள தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் நடத்தும், கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி நிலையத்தில், 575 மாணவ, மாணவியர் படிக்கிறோம். தமிழக முதல்வரின் ஆணைக்கி-ணங்க, அனைத்து கல்லுாரி மாணவர்களுக்கும் விலையில்லா லேப்டாப் வழங்கப்படுகிறது. இதில், எங்கள் கல்லுாரியில் படிக்கும் மாணவர்-களுக்கு இதுவரை லேப்டாப் வழங்கவில்லை. இது அரசு சார்ந்த பயிற்சி நிலையம். மேலும், தமிழக அரசின் பல்கலைக்கழக தகவல் துறை-யிலும், எங்கள் நிலைய மாணவர்கள் தமிழக அரசின் லேப்டாப் பெற தகுதி உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசின் லேப்டாப் வழங்கும் திட்-டத்தின் மூலம், எங்கள் பட்டய பயிற்சி நிலை-யத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்திருந்தனர்.

