sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அங்கன்வாடி மையம் அருகே தேங்கும் கழிவுநீர் சுகாதார சீர்கேட்டால் குழந்தைகள் அவதி

/

அங்கன்வாடி மையம் அருகே தேங்கும் கழிவுநீர் சுகாதார சீர்கேட்டால் குழந்தைகள் அவதி

அங்கன்வாடி மையம் அருகே தேங்கும் கழிவுநீர் சுகாதார சீர்கேட்டால் குழந்தைகள் அவதி

அங்கன்வாடி மையம் அருகே தேங்கும் கழிவுநீர் சுகாதார சீர்கேட்டால் குழந்தைகள் அவதி


ADDED : நவ 28, 2024 12:59 AM

Google News

ADDED : நவ 28, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அங்கன்வாடி மையம் அருகே தேங்கும் கழிவுநீர்

சுகாதார சீர்கேட்டால் குழந்தைகள் அவதி

நல்லம்பள்ளி, நவ. 28-

தர்மபுரி அடுத்த, நார்த்தம்பட்டியில் அங்கன்வாடி மையம் அருகே உள்ள பாதாள சாக்கடை கால்வாயால் குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த நார்த்தம்பட்டியில் ஒரு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில், 25 குழந்தைகள் கல்வி பயில வந்து செல்கின்றனர். இந்நிலையில், நார்த்தம்பட்டி கிராமம் முழுவதும் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த அங்கன்வாடி மையம் அருகே உள்ள கழிவுநீர் தொட்டியில் தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவு நீர் தேங்கியதால், அங்கன்வாடி கட்டடம் நீரில் ஊறிய மண்ணில் இறங்கி கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், தேங்கும் கழிவுநீரில் இருந்து கொசு உள்ளிட்ட பூச்சிகள் உற்பத்தியாகி குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, அங்கன்வாடி மையம் அருகே அமைந்துள்ள சாக்கடை கழிவுநீர் தொட்டியை வேறு இடத்துக்கு மாற்றி அமைக்க வேண்டுமென, குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us