sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நிரம்பிய சின்னார் அணை : 150 கன அடி நீர் திறப்பு

/

நிரம்பிய சின்னார் அணை : 150 கன அடி நீர் திறப்பு

நிரம்பிய சின்னார் அணை : 150 கன அடி நீர் திறப்பு

நிரம்பிய சின்னார் அணை : 150 கன அடி நீர் திறப்பு


ADDED : டிச 08, 2024 01:35 AM

Google News

ADDED : டிச 08, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு, டிச. 8-

பஞ்சப்பள்ளி சின்னாறு அணை, முழு கொள்ளளவை எட்டியதால் வினாடிக்கு, 150 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க, மாவட்ட கலெக்டர் சாந்தி அறிவுறுத்தி உள்ளார்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த, பஞ்சப்பள்ளி சின்னாறு அணையின், சுற்றுவட்டார பகுதிகளான தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட காப்புக்காடு பகுதிகளில் தொடர் மழையால், சின்னார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதில், 50 அடி உயரம் கொண்ட அணை தற்போது, 48 அடியை எட்டியுள்ளது. அணை பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும், 150 கன அடி நீர் நேற்று முதல் அப்படியே திறந்து விடப்படுகிறது. மேலும், அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து, உபரிநீர் திறக்கப்படுவதின் அளவு மாறுபடும் என, பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், ஆற்றங்கரையோரம் கால்நடைகளை மேய்ச்சலுக்காக கொண்டு செல்ல வேண்டாம் எனவும், மாவட்ட கலெக்டர் சாந்தி அறிவுறுத்தி உள்ளார்.






      Dinamalar
      Follow us