ADDED : மே 13, 2026 04:38 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே நேற்று, அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., மாநில தணைத்தலைவர் நாகராசன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சண்முகம் உட்பட பலர் பேசினர்.
இதில், உத்தரபிரதேச மாநிலத்தில், 8 மணி நேர வேலை கேட்டு போராடிய தொழிலாளர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி உள்ளனர். அவர்கள் மீது பொய் வழக்கை போட்டு கைது செய்-துள்ளனர்.
கைது செய்த தொழிலாளர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும். தொழிலாளர் விரோத, 4 தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். சமையல் காஸ் சிலிண்டர் விலையை திரும்ப பெற வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு-றுத்தி கோஷமிட்டனர்.
