/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பனிப்பொழிவு, மழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை
/
பனிப்பொழிவு, மழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை
ADDED : ஜன 20, 2025 06:48 AM
தர்மபுரி: பனிப்பொழிவு மற்றும் சாரல் மழையால், தர்மபுரி மாவட்டத்தில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
தர்-மபுரி மாவட்டத்தில், தர்மபுரி, நல்லம்பள்ளி, தொப்பூர், பாலக்-கோடு, மொரப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நேற்று அதிகாலை முதல், காலை, 8:00 மணி வரை கடும் பனி-பொழிவு நிலவியது. பெங்களூரு -- சேலம் தேசிய நெடுஞ்சா-லையில் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு, கடும் பனி பனிப்பொழிவு காணப்பட்டது. வாகன ஓட்டிகள் வாக-னங்களை மிதமான வேகத்தில், முகப்பு விளக்கை எரிய விட்ட-படி இயக்கினர். விவசாய நிலங்களிலும், பனி படர்ந்து காணப்-பட்டது. கடும் குளிரால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்-கினர்.
நேற்று மதியம், 2:20 மணி முதல், அரை மணி நேரம் மாவட்டத்தில் பெரும்பாலானா இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால், காலை முதல் மாலை வரை தொடர்ந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
* அரூர் மற்றும் மோப்பிரிப்பட்டி, நாச்சினாம்பட்டி, அச்சல்வாடி, கூக்கடப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில், நேற்று அதிகாலை, 4:00 மணி முதல் பரவலாக விட்டு விட்டு சாரல்மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. சாரல்மழையால் நெல் அறுவடை பணி பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் கவலையடைந்தனர்.