ADDED : டிச 01, 2025 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சுண்டேகுப்பம்
அருகே வசிப்பவர், 17 வயது சிறுமி. தர்மபுரி தனியார் கல்லுாரியில்,
பி.எஸ்சி., மைக்ரோ பயாலஜி முதலாமாண்டு படிக்கிறார்.
கடந்த, 29ம் தேதி
காலை, 9:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி திரும்பி வரவில்லை.
அவரது தாய், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம்
கொடுத்த புகாரில், மொட்டையன்கொட்டாயை சேர்ந்த சுரேஷ், 21, மீது
சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து
வருகின்றனர்.

