ADDED : ஜூலை 12, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு :தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கடைவீதியில் காங்., சார்பில், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என்ற நோக்கத்தில் பிரசாரம், வட்டார தலைவர் கணேசன் தலைமையில் நடந்தது.
மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் எம்.பி., தீர்த்தராமன் பிரசாரத்தை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். பஸ் ஸ்டாண்ட், கடைவீதி வழியாக தக்காளிமண்டி வரை, வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
காங்., நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

