ADDED : ஜூலை 30, 2026 02:18 AM
அ நிறம் | அளவு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஒடசல்பட்டியை சேர்ந்தவர் சென்னப்பன், 52, கட்டட மேஸ்திரி;
இவர், நேற்று டி.அம்மா-பேட்டையில் உள்ள சென்னியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில் வீட்டிற்கு வந்தார். அரூர் - தீர்த்தமலை சாலையில், நாசன்கொட்டாய் அருகே மதியம், 3:00 மணிக்கு வந்த போது மொபட்டில் இருந்து சென்னப்பன் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்தி-லேயே பலியானார். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
