ADDED : மார் 17, 2025 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், தோல்பூர் மாவட்டம், கயஸ்தபாராவை சேர்ந்தவர் ராகேஷ், 30. இவர், தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியில், மேம்பாலம் கட்டுமான பணிக்கு ஒப்பந்தம் பெற்றுள்ள திலீப்கான் நிறுவனத்தில் கடந்த, 3 மாதமாக பணியாற்றி வந்தார்.
நேற்று மதியம், 1:00 மணிக்கு தொப்பூர் - பப்பிரெட்டியூர் சாலையில், மண்ணுக்குழி என்ற இடத்தில் பணியாற்றியபோது, அருகில் வைத்திருந்த கான்கிரீட் கல் சரிந்து ராகேஷ் மீது விழுந்ததில் உயிரிழந்தார். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.