/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாலக்கோட்டில் தொடர் மழை: தக்காளி விலை உயர வாய்ப்பு
/
பாலக்கோட்டில் தொடர் மழை: தக்காளி விலை உயர வாய்ப்பு
பாலக்கோட்டில் தொடர் மழை: தக்காளி விலை உயர வாய்ப்பு
பாலக்கோட்டில் தொடர் மழை: தக்காளி விலை உயர வாய்ப்பு
ADDED : ஏப் 13, 2025 05:02 AM
பாலக்கோடு: பாலக்கோடு, மாரண்டஹள்ளி சுற்றுவட்டாரத்தில் கடந்த, 2 தினங்களாக பெய்து வரும் மழையால், தக்காளி விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்ட-ஹள்ளி, பஞ்சபள்ளி உள்ளிட்ட இடங்களில், தக்காளி அதிகளவில் சாகுபடி
செய்யப்படுகிறது. இங்கு விளையும் தக்காளி, பாலக்கோடு தின-சரி தக்காளி சந்தை, காய்கறி சந்தை மற்றும் தர்மபுரி உழவர் சந்-தைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மேலும், சென்னை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிக-ளுக்கும் அனுப்பப்படுகிறது. விவசாயிகளிடம் ஒரு கிலோ, 3 முதல், 4 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் தக்காளி, மாவட்ட உழவர் சந்தைகளில் கடந்த ஒரு மாதமாக, 10 முதல், 14 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக, பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பஞ்சபள்ளி சுற்-று
வட்டாரத்தில் மாலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தோட்டங்களில் தக்காளி அழுகும் நிலை ஏற்பட்டுள்-ளது. மேலும் சில நாட்கள் மழை தொடர்ந்தால், தக்காளி வரத்து குறைந்து, விலை உயர வாய்ப்புள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்-தனர்.

