ADDED : ஜன 30, 2024 03:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்:அரூர், ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று, 7 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது.தர்மபுரி மாவட்டம், அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று இ-நாம் மூலம் பருத்தி ஏலம் நடந்தது.
இதில், 80 விவசாயிகள், 101 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால், 6,466 முதல், 7,269 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 101 குவிண்டால் பருத்தி, 7 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.