ADDED : ஜன 31, 2024 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்:அரூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று 7 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் போனது.
தர்மபுரி மாவட்டம், அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று 'இ-நாம்' வாயிலாக பருத்தி ஏலம் நடந்தது. இதில், 80 விவசாயிகள், 101 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால், 6,466 முதல், 7,269 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம், 101 குவிண்டால் பருத்தி, 7 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக அதிகாரிகள் கூறினர்.