/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் வெளியூர் செல்ல அலைமோதிய மக்கள்
/
ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் வெளியூர் செல்ல அலைமோதிய மக்கள்
ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் வெளியூர் செல்ல அலைமோதிய மக்கள்
ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் வெளியூர் செல்ல அலைமோதிய மக்கள்
ADDED : நவ 04, 2024 04:25 AM
அரூர்: தர்மபுரி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்-களில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இதேபோல், ஏராளமானோர் வெளியிடங்களில், அரசு மற்றும் தனியார் நிறுவ-னங்களில் பணியாற்றுகின்றனர். மேலும், கேரளா, கர்நாடகா உள்-ளிட்ட வெளிமாநிலங்களிலும் கூலிவேலை செய்கின்றனர்.
தீபாவளி பண்டிக்கைக்கு கடந்த வாரம் அவர்கள் ஊருக்கு வந்தி-ருந்தனர். தொடர்ந்து, 4 நாள் விடுமுறை முடிந்து தாங்கள் படிக்கும் இடங்களுக்கு மற்றும் பணியாற்றும் ஊர்களுக்கு செல்ல, நேற்று காலை, 10:00 மணி முதல், அரூர் பஸ் ஸ்டாண்டில், ஏராளமானோர் குவிந்தனர். பஸ் இருக்கையில் இடம் பிடிக்க முண்டியடித்து ஏறியதால், தள்ளு, முள்ளு ஏற்பட்-டது. மாணவ, மாணவியரை வழியனுப்ப அவர்களது பெற்-றோரும் உடன் வந்ததால், அரூர் பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் விடு-முறை முடிந்து, வெளியூர் செல்ல நேற்று காலை, 8:30 மணி முதல், மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் குவிந்தனர். * தர்மபுரி பஸ் ஸ்டாண்டில், நேற்று பஸ்களில் கூட்டம் அலை-மோதியது. பயணிகள் கூட்டத்தால் வெளியூர்களுக்கு நேற்று, கூடு-தலாக, 75 பஸ்கள் என மொத்தம், 150 பஸ்கள் இயக்கப்பட்டன. இதில், சென்னைக்கு, 40, ஓசூர், பெங்களூரு மார்க்கத்தில், 60, சேலம், ஈரோடு மார்க்கத்தில், 50 என மொத்தம், 150 பஸ்கள் வரை இயக்கப்பட்டதாக, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.