/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.18 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணி
/
ரூ.18 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணி
ADDED : அக் 16, 2025 01:04 AM
மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கெலவள்ளி பஞ்.,ல் வறட்சி நிதி, 2024-25 திட்டத்தில், 3.90 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு மற்றும்
மின்மோட்டார் பைப்லைன் அமைக்கும் பணி, 100 நாள் வேலை உறுதி திட்டத்தில், 8.50 லட்சம் ரூபாய் மதிப்பில், கால்வாய் துார்வாரும் பணி. கே.ஈச்சம்பாடி பஞ்.,ல் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தில், 5.83 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய வகுப்பறை கட்டடங்கள் என, மொத்தம், 18.23 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்த பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சதீஸ் ஆய்வு செய்தார்.
மேலும், கே.ஈச்சம்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கலெக்டர் சதீஸ் ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவியரின் கற்றல் அடைவு மற்றும் வாசிப்பு திறன் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது, மொரப்பூர் பி.டி.ஓ., சத்யா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.