ADDED : பிப் 17, 2026 07:12 AM

தர்மபுரி; தர்மபுரி குமாரசாமிபேட்டை அங்காள பரமேஸ்-வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திரு-விழா, கடந்த, 13ல் கொடியேற்றத்துடன் துவங்-கியது. 14ல் பூ மிதி திருவிழா மற்றும் அம்ம-னுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்-காக குழந்தைகளை சுமந்த படி பூ மிதித்தனர். பின், பூ கரகத்தை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு கொண்டு சென்றனர். நேற்று முன்-தினம் மாலை பொங்கல் வைத்தல் மற்றும் கங்கை பூஜை நடந்தது.
நேற்று காலை நடந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவி-லுக்கு பால்குடத்தை ஊர்வலமாக எடுத்து சென்-றனர். பின், அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்-தது. தொடர்ந்து, நேற்றிரவு அம்மனுக்கு திருக்-கல்யாணம் நடந்தது. விழாவின், முக்கிய நிகழ்-வான மயான கொள்ளை இன்று, மதியம், 12:00 மணிக்கு நடக்கிறது. மாலை அம்மன் பூ பல்-லாக்கு ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்

